
சமூக ஊடகங்கள் வந்ததும், சமூகத்தின் பிரச்சினைகள் வெளியில் வந்தது உண்மை.
ஆனால் சமூக சீரழிவுக்;கும் அந்த ஊடகங்கள் பங்களிக்கின்றன என்பது கவலைக்குரியது.
எனவே சமூக ஊடகத்துறையினருக்கு, தெளிவூட்டல் பயிற்சிகள் அவசியம்.
அதுவே சமூக ஊடகங்களை பாதுகாக்கும்.
சமூக ஊடகங்கள் வந்ததும், சமூகத்தின் பிரச்சினைகள் வெளியில் வந்தது உண்மை.
ஆனால் சமூக சீரழிவுக்;கும் அந்த ஊடகங்கள் பங்களிக்கின்றன என்பது கவலைக்குரியது.
எனவே சமூக ஊடகத்துறையினருக்கு, தெளிவூட்டல் பயிற்சிகள் அவசியம்.
அதுவே சமூக ஊடகங்களை பாதுகாக்கும்.
கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் *தினேஷ் ஹெதாவ்*, 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற இந்த சாதனையானது, வெறும் 49 வினாடிகளில் 50 மீட்டர் தூரத்தைக் கடந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட முன்னைய சாதனையான 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து நிகழ்த்தப்பட்டது. மேலும், இந்த சாதனையானது “சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)” மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென் பெனடிக்ட் கல்லூரியில் சாதனை மாணவனைப் பாராட்டி ஒரு சிறப்புப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சோழன் சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவனின் இந்த வெற்றிக்கு அவரது பெற்றோர்களான குணரத்னம் தினேஷ் மற்றும் சுதர்ஷனி மகேந்திரன் ஆகியோரும், பயிற்சியாளர்கள் மற்றும் கல்லூரியின் நீச்சல் குழு ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாணவன் ஹெதாவின் இந்த சாதனையானது “இலங்கையின் இளம்…
சீனாவின் கசாக் மாகாணத்தின் ஜின்ஜியாங் நகரிலுள்ள தொங்கு பாலத்தின் கேபிள் திடீரென அறுந்ததனால் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இச்சம்பவத்தில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதாகவும் கூறுப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜின்பிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.