
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயங்களில் 30 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கபெற்றுள்ளன.
பதிவாகியுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வேட்பாளர் ஒருவரும் 7 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.