
கொழும்பு, மோதர கோவில் அருகே உள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு 21 வயது இளைஞனை, தடிகள் மற்றும் விக்கெட்டுக்களால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 5 பேருக்கே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.