ஒரே குட்டையில் ஊறிய மட்டை,A single puddle of mud,තනි මඩ ගොහොරුවක්


இலங்கையில் தீவிரமான தேர்தல் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்போது கொள்கை, கோத்திரங்கள் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமைக்கு உதாரணங்களும் நிகழ்கின்றன.
இதில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்தும் அடங்குகிறது.
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசசபைகளுக்கு நிதியொதுக்கீடுகளை கண்ணை மூடிக்கொண்டு வழங்கப்படும் என்றும்;, ஏனைய கட்சிகளின் ஆளுகைக்கு உட்பட்ட சபைகளின் நிதியொதுக்கீடுகள் தொடர்பில் பல தடவைகள் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொள்கைகளையே முன்னைய ஜனாதிபதிகளும் கடைப்பிடித்தனர்.
அந்தக் கொள்கையே, உள்ளூர் மட்டத்தில், ஆளும் கட்சிகளின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு வழிவகுத்தது என்பதை சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

A single puddle of mud

Sri Lanka is engaged in intense electoral politics.
There are also examples of political and tribal differences not being taken into account.
This includes the comments of President Anura Kumara Dissanayake.
He has stated that financial allocations to the local Councils governed by the National People’s Power will be provided blindly, and that the financial allocations of the councils governed by other parties will be reviewed several times.
These are the same policies that previous presidents also followed.
It must be pointed out that this policy has led to corruption and fraud by the ruling parties at the local level.

  • Related Posts

    • 62 views
    இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை

    இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து அரசியலில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.குறி;ப்பாக, முன்னிலை சோசலிஸக்கட்சி தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.இந்த உடன்படிக்கை காரணமாக, இந்திய- சீனப் போரில் இலங்கையும் உள்வாங்கப்படும் என்று அந்தக்கட்சி அச்சம் வெளியிட்டுள்ளது.இதன் உண்மைத் தன்மை குறித்து யாரும் அறியாத நிலையில், இலங்கையை பொறுத்தவரையில், பொருளாதார மற்றும் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்தரமின்மை காரணமாக, பலமிக்க நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையை யாரும் மறுக்கமுடியாது.குறிப்பாக முன்னிலை சோசலிஸக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த நிலைப்பாட்டில் இருந்து தப்ப முடியாது. India-Sri Lanka Security Agreement During the Indian Prime Minister’s visit to Sri Lanka, criticism has been expressed in politics regarding the security agreement to be signed between Sri Lanka and India.In particular, the Frontline Socialist Party has expressed its criticism.The party has expressed fear that due to this agreement, Sri Lanka will also be drawn into the Indo-China war.While no one knows…

    • 59 views
    அதானியா? அனுரவா? தீர்மானிப்பது மோடி,Adani? Anura? Modi decides,අදානි? අනුර? මෝඩි තීරණය කරයි

    அதானியின் மன்னார் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைப்பாடுகளில், மோடியின் பயணத்தின் பின்னர் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மன்னாரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்திட்டத்தில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்த அதானி நிறுவனத்துடன் ரணில் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையை விட, குறைந்த கட்டண உடன்படிக்கையை, சம்பூர் காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் அனுர அரசாங்கம் வேறு ஒரு இந்திய நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ளது.எனவே இங்கு தர்க்கரீதியான வாதத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்கிறது. விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அனுரகுமாரவும் உறுதியாக தெரிவித்து வருகிறார்எனினும் தாமும் முன்னைய நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று அதானி நிறுவனம் கூறுகிறது.மறுப்பக்கத்தில் மன்னார் மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இதனையும் அனுர அரசாங்கம் கருத்திற்;கொள்ளவேண்டியுள்ளது.அதேநேரம் இலங்கையின் வடக்கு மக்களின் நன்மதிப்பை தக்கவேண்டியது அவசியம் என்ற வகையில் இந்திய அரசாங்கமும் மன்னார் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவேண்டியுள்ளது.இந்த விடயம், தற்போது இலங்கை மக்களுக்கும் வெளிச்சமிடப்பட்ட தகவலாக மாறியுள்ளது.எனவே மோடியின் பயணத்துக்கு பின்னர் அதானியின் போக்கில் மாற்றம் ஏற்படுமா? அனுரவின் போக்கில் மாற்றம் ஏற்படுமா? அல்லது அரசியல் தேவையை கருத்திற்கொண்டு மன்னார் மக்களின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இந்த திட்டத்தை கைவிடுமா?…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *